கோவையில் வரும் 12ம் தேதி மாநில அளவிலான யோகா போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஸ்வஸ்திக் யோகா மையம் சார்பில் நடத்தப்படும் முதல் மாநில அளவிலான யோகா போட்டி, நீலாம்பூரில் உள்ள டெக்லத்தானில் நடைபெற இருக்கிறது. ஆஃப்லைன், ஆன்லைன் என இருமுறைப்படி நடக்கும் இந்த யோகா போட்டியில் 3 வயது முதல் 51 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஆஃப்லைன் எனப்படும் நேரடியாக பங்குபெறும் யோகா போட்டியில் பங்குபெறுபவர்கள் 12ம் தேதி டெக்லத்தானில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள் ஏதேனும் 5 ஆசனங்களை செய்து காண்பிக்க வேண்டும். இவர்களுக்கு கட்டணமாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களின் விபரம் அன்றைய மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்படும்.
அதேபோல, ஆன்லைனில் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் யோகா செய்யும் வீடியோவை 12ம் தேதிக்குள் போட்டிக்குழுவினருக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெற்றியாளர்களின் விபரம் 19ம் தேதி வெளியிடப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.