கோவையில் வரும் 12ம் தேதி மாநில அளவிலான யோகா போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஸ்வஸ்திக் யோகா மையம் சார்பில் நடத்தப்படும் முதல் மாநில அளவிலான யோகா போட்டி, நீலாம்பூரில் உள்ள டெக்லத்தானில் நடைபெற இருக்கிறது. ஆஃப்லைன், ஆன்லைன் என இருமுறைப்படி நடக்கும் இந்த யோகா போட்டியில் 3 வயது முதல் 51 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஆஃப்லைன் எனப்படும் நேரடியாக பங்குபெறும் யோகா போட்டியில் பங்குபெறுபவர்கள் 12ம் தேதி டெக்லத்தானில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள் ஏதேனும் 5 ஆசனங்களை செய்து காண்பிக்க வேண்டும். இவர்களுக்கு கட்டணமாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களின் விபரம் அன்றைய மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்படும்.
அதேபோல, ஆன்லைனில் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் யோகா செய்யும் வீடியோவை 12ம் தேதிக்குள் போட்டிக்குழுவினருக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெற்றியாளர்களின் விபரம் 19ம் தேதி வெளியிடப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.