கோவை : கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தண்ணீர்ப் பந்தல் வளைவில் வாகன சோதையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த எய்சர் வாகனத்தை சோதனை செய்ததில், அதில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மக்களிடம் அதிக பணம் கொடுத்து ரேசன் அரிசியை பெற்று கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து, 50 கிலோ எடையில் 210 பைக்களில் இருந்த 10 ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தியை வாகனத்தையும் பறிமுதல் செய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர், கடத்தலில் ஈடுபட்ட தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் பீளமேடு பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்த் ஆகிய இருவரை கைது செய்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.