சிறுமிக்கு பாலியல் துன்புறுதல் கொடுத்த 55 வயது முதியவர் கைது
Author: kavin kumar9 October 2021, 3:29 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுதல் கொடுத்த 55 வயது முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (55), இவர் அதே பகுதியில் உள்ள ஐந்து வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் அச்சிறுமியிடம் இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனை அடுத்து அச்சிருமியின் உடலில் இருந்த காயங்களை கண்ட அவரது பெற்றோர்கள் நடந்ததை குறித்து சிறுமியிடம் கேட்டனர்.
அப்போது முனியப்பன் சிறுமியிடம் பாலியல் துன்புரத்தலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அச்சிறுமியின் பெற்றோர்கள் இது குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மனப்பட்டு வனப்பகுதியில் பதுங்கி இருந்த முனியப்பனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுப்பட்டதை ஒப்புகொண்டதை அடுத்து அவரை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
0
0