அமராவதி ஆற்றில் ஆயில் இன்ஜின் மூலம் நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் மோட்டார்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் சூழலில் ஆறுகளிலேயே ஆயில் இன்ஜின் பொறுத்தப்பட்டு அதன் மூலம் மோட்டர்கள் கொண்டு நீரினை உறிஞ்சி குடிநீராக வேன் மற்றும் லாரிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சட்டவிரோத செயல்கள் கரூர் அமராவதி ஆறுகளில் ஆற்றின் கரையோரம் இருபகுதிகளிலும் நடைபெற்று வந்தன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்நடவடிக்கை எடுத்து ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அந்த மோட்டார்களை அகற்றியது.
இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவுப்படி கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 வட்டங்களில் நீர்நிலைகளில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக அமராவதி ஆற்றங்கரைகளில் 269 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அதை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதில் மண்மங்கலம் வட்டம், தாளப்பட்டி கிராமத்தில் அமராவதி ஆற்றில் குழாய் பதித்து, ஆயில் இன்ஜின் வைத்து சட்டவிரோதமாக நீரை உறிஞ்சி எடுத்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மண்மங்கலம் தாசில்தார் ராதிகா மற்றும் அமராவதி வடிநில உபகோட்ட உதவி பொறியாளர் ராஜகோபால் தலைமையில் வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மோட்டார்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தாளப்பட்டி கிராமத்தில் மட்டும் 15 இடங்களில் ஆயில் இன்ஜின் வைத்து, பைப் லைன் அமைத்து மோட்டார் மூலமாக ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சுவது கண்டறியப்பட்டு ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டுள்ளது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.