தருமபுரி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்து தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினர் பல்வேறு வழக்குகளில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தற்போது தமிழகத்தை ஆளும் திமுக அரசு அதிமுகவினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகினறனர். அதே போல தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யான வழக்குகள். அதிமுக தலைமை கழகம் இதுபோன்ற பொய் வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளது. இனி வரும் காலங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போட்டால் மிக பெரிய போராட்டம் நடைபெரும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், கோவிந்தசாமி, சம்பத்குமார் உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.