Categories: Uncategorized @ta

எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது : சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி…

திருப்பூர் : இந்த தேசம் உலகத்தின் முதல் நாடாக உயரவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற கட்சி பாஜக என்றும் எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது எனவும் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக பாஜக எழுச்சியோடும் இந்த நகராட்சியை கைப்பற்றிய தீரவேண்டும் என்ற உத்வேகத்தோடு மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆதரவு தருகிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை சந்தித்தோம் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். தெளிவாக சொன்னார்கள் அவருடைய தந்தை மொழிப்போர் தியாகி, ஆனால் நான் ஒரு ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாகவும்,

நான் மிகுந்த நாட்டுப் பற்று உடையவள், மோடியின் உடைய கரங்கள் வலுப்படுத்த வேண்டும், தமிழகம் இன்றைக்கும் என்றைக்கும் நம்முடைய முத்துராமலிங்கத்தேவர் கூறியதுபோல் தேசியம் தெய்வீகத்தின் பக்கம்தான் நிற்கும். வரப்போகின்ற தேர்தல் தாமரைக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் கவர்னரை இழித்தும் பழித்தும் பேசுவது திமுகவின் வேடிக்கையாக உள்ளது. கவர்னர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் அறிவார்கள் கவர்னர் உரை என்பது கவர்னர் தருகின்ற உரை அல்ல அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ அதை செய்வதுதான் கவர்னர் உடைய பணி சட்டமன்றத்திலே செய்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக அரசு எதை எழுதி தந்திருக்கிறது மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நீட் தேர்வு என்பது மறுக்கப்படுகின்ற பொழுது நீர் தேர்வு அதற்கு ஆதரவாக கவர்னர் கையெழுத்து இட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திமுகவிற்கு இருக்கிறது. ஒரு கவர்னர் அரசியல் சாசனத்தை மீறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக நடந்து கொண்டிருப்பது நடைமுறை சாத்தியம் இல்லை. இதை திராவிட முன்னேற்றக் கழகம் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை அவர்கள் மிகப் மிகப் பெரிய எச்சரிக்கையை திமுக அரசுக்கு தந்திருக்கிறார். அவர்கள் மட்டும் முரசொலியில் எழுதலாமா தொப்பென்று நினைத்தாயோ கொங்கணவா என்று எழுதுவார்கள்.

அதற்கு பதில் தரக்கூடாது என்று எதிர்பார்த்தால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. பாஜக தேசிய வெற்றி தோல்விகளை தாண்டி இந்த தேசம் உலகத்தின் முதல் நாடாக உயரவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற கட்சி. காவி மறவர்களின் கட்சி எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது. அவரவர்கள் ஜனநாயக ரீதியில் கொள்கைகளை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தமிழ் மக்கள் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

KavinKumar

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.