கடையின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை
6 September 2020, 5:17 pmசென்னை: சென்னையில் உள்ள கடையின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழில் நகர் அண்ணாசாலை தெருவில் வேல்முருகன் (43) என்பவர் மளிகை கட நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் 8 மணியளவில் கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் இன்று காலையில் கடை திறக்கும் போது வேல்முருகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.இதனை கண்டதும் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்..
0
0