திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தண்டுமேடு கிராமத்தில் வசித்து வருபவர் ராஜி(50) விவசாயி. இவர் கடந்த புதன்கிழமை வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 32 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள்,
15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் ராஜி புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.