புதுச்சேரியில் 33 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி- பதிப்பு எண்ணிக்கை 36935 ஆக உயர்வு
29 November 2020, 3:48 pmQuick Share
புதுச்சேரி: புதுச்சேரியில் 33 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பதிப்பு எண்ணிக்கை 36935 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்த 21 நபருக்கும், காரைக்காலை சேர்ந்த 6 நபருக்கும், ஏனாமில் 1 நபருக்கும், மாஹேவை சேர்ந்த 5 நபர்களுக்கும் புதியதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 480 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35846 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில் உயிரிழந்தவர்களிம் எண்ணிக்கை 609ஆகவே உள்ளது, மேலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36, 935ஆக உயர்ந்துள்ளது.
Views: - 0
0
0