டெல்லி சென்ற போராடினால் தடுத்து நிறுத்துகின்றனர்:அய்யாகண்ணு குற்றச்சாட்டு…
Author: kavin kumar30 October 2021, 7:56 pm
திருச்சி: டெல்லி சென்ற போராடினால் மத்திய அரசிற்கு பாதிப்பு என்பதற்காக தங்களை தடுத்து நிறுத்துவதாக அய்யாகண்ணு குற்றச்சாட்டியுள்ளார்.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து கரூர் பைபாஸ், மலர் சாலையில் பிறந்து கடந்த 12ஆம் தேதி முதல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இரண்டு மடங்கு லாபம் தரும் விலை தந்து விவசாயிகள் நெஞ்சில் நிறைவை ஏற்படுத்துகிறேன் என்று கூறிய மோடி கடந்த ஏழு வருடங்களாக இரண்டு மடங்கு லாபகரமான விலை தராமல் விவசாயிகளின் காதில் பூ வைத்து மோடி ஏமாற்றி விட்டார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் காதில் பூ வைத்து நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0
0