வேலூர் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்ததுடன் 28 துறைகளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்த பின்னர், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் சமூக நல்லிணக்க வலியுறுத்தும் வகையில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட ஆட்சியர்,
காவலர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சிறப்பாக பணியாற்றிய 48 காவலர்களுக்கு முதலமைச்சரின் நற்பணி பதக்கங்களும், பின்னர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட 28 பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொரானா பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வெளியை பின்பற்றியும் பெற்று பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.