திருமணமான ஒரு மாதத்தில் பெண் காவலர் உயிரிழப்பு
25 November 2020, 4:13 pmதிருப்பூர்: தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர் திருமணமான ஒரு மாதத்தில் சகுந்தலா விபத்தில் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் சகுந்தலா. இவர் திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி சேர்ந்தவர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சகுந்தலா விற்கும் கதிர்வேலன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது திருமணம் முடிந்து மீண்டும் பணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருவதற்காக திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் நோக்கி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது ரெட்டியார்சத்திரம் அருகே மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவர் கதிர்வேலன் உம் மனைவி சகுந்தலாவும் காயமடைந்தனர். இவர்களை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
0
0