Categories: Uncategorized @ta

கோவையில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயம் : முதலிடம் பிடித்த சென்னை வீரர்…

கோவை : கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021 இன் 4-வது சுற்றின் இறுதி போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை ,திருச்சூர், பெங்களூர், புனே, ஒரிசா ,குஜராத் உள்ளிட்ட பல போன்ற பகுதிகளில் இருந்து முன்னனி கார் பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற எல்.ஜி.பி ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் சீரிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 14சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீரர்களும் தன் முன் செல்லும் வீரரரின் காரினை முந்தும் முனைப்பில் வேகத்தை கூட்டிச்சீறிப்பாய்ந்தனர். முதல் சுற்று முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திய சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து சாம்பியனாக பட்டத்தை வென்றதுடன் கோப்பையையும் கைபற்றினார்.

இது விஷ்ணு பிரசாத்தின் 14வது தேசிய பட்டமாகும். இரண்டாம் இடத்தை திருச்சூரை சேர்ந்த தில்ஜித் , மூன்றாவது இடத்தை கோவையை சேர்ந்த பாலாபிரசாத் பிடித்தனர். கடந்த இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளின் ஒட்டுமொத்த சாம்பியன்னாக 70 புள்ளிகள் பெற்ற விஷ்ணுபிரசாத் முதலுடத்தையும், 59 புள்ளிகள் பெற்ற தில்ஜித் இரண்டாம் இடத்தையும் ,55 புள்ளிகள் பெற்ற ஆரியா சிங் மற்றும் சந்தீப் குமார் மூன்றாம் இடம் பிடித்தனர்.

இதேபோல் ராயல் என்பீல்டு இருசக்கர வாகன போட்டியில் அல்வின் சேவியர் முதலுடத்தையும், மெகா விதுராஜ் இரண்டாம் இடத்தையும், அனிஷ் செட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். கொரானா பாதுகாப்பு முறைகள் பின்பற்றபட்டு நடத்தபட்ட இந்த தேசிய அளவிலான நான்கு மற்றும் இருசக்கர வாகன போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது இருப்பீனும் போட்டியை சாலைகளில் நின்றபடியே ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

KavinKumar

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

15 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

16 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

17 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

17 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

18 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

19 hours ago

This website uses cookies.