சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் KCP நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் KCP Infra Limited நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தென்னிந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட திட்டங்களை சிறப்பான முறையில் முடித்துக் கொடுத்ததால், பல விருதுகளையும், பல்வேறு மாநில அரசுகளின் பாராட்டுக்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தெலங்கானா, ஆந்திராவில் மத்திய அரசின் மிலிட்டரி என்ஜினியரிங் சர்வீசஸ் துறையில் அதிசிறந்த உள்கட்டமைப்பு ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும், தமிழகம், கேரளாவில் முன்னணி சிவில் ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும் KCP நிறுவனம் பெற்றுள்ளது.
இதுவரையில் தென்னிந்தியாவில் மட்டும் பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செய்து வந்த KCP நிறுவனம், தனது பணிகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக, உலகத் தரம் வாய்ந்த Zetwerk manufacturing business Pvt Ltd நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திரபிரகாஷ் மற்றும் Zetwerk நிறுவனத்தின் ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய உள்கட்டமைப்பு பணிகளை இருநிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள இருக்கிறது.
இது குறித்து KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திர பிரகாஷ் பேசுகையில், “KCP நிறுவனம் தென்னிந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் பல்வேறு திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில், 5,000க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் துடிப்பான நிறுவனமான இருக்கும் எங்களின் நிறுவனம், இனி வரும் ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை,” எனக் கூறினார்.
Zetwerk நிறுவனமானது 15 நாடுகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.