Categories: Uncategorized @ta

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பு

தருமபுரி : தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தலைவர் பதவி பிடிப்பதற்காக திமுக, அதிமுக மற்றும் பாமக கட்சிகளிடையே பொட்டி நிலவிவருகிறது. அதனால் அரசியல் கட்சிகளிடையே போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்திகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.