தருமபுரி : தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தலைவர் பதவி பிடிப்பதற்காக திமுக, அதிமுக மற்றும் பாமக கட்சிகளிடையே பொட்டி நிலவிவருகிறது. அதனால் அரசியல் கட்சிகளிடையே போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்திகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
This website uses cookies.