பெரியார் பேருந்து நிலையம் அருகே வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிக்கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், மதுரை மாநகர் மையப் பகுதியில் உள்ள இன்மையின் நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் தர்ஷன் தனது 19ஆவது பிறந்த நாளை நண்பர்களோடு பெரிய வாள் மற்றும் கத்திகளை கொண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மதுரை மாநகர் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.