Uncategorized @ta

இவ்வளோ முடி கொட்டுதேன்னு இனி கவலை வேண்டாம்… சொல்யூஷன் ரெடியா இருக்கு!!!

பல நபர்கள் அடிக்கடி தலைமுடி பிரச்சனைகள் குறித்து வருத்தப்படுவதை நம்மால் கேட்க முடிகிறது. ஆனால் இதனை கவனிக்காமல் விட்டு விட்டால் அதனால் மோசமான விளைவுகள் உண்டாகலாம். தலைமுடி பிரச்சனையை கையாளுவது என்பது அதன் அடிப்படை காரணத்தை புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அதற்கான சிறந்த தீர்வுகளை நம்மால் பெற முடியும். மன அழுத்தம், மரபணுக்கள், ஹார்மோன் சமநிலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஒரு சில மருந்துகள், இறுக்கமாக தலைமுடியை பின்னுவது, தலைமுடி பராமரிப்பு ப்ராடக்டுகள், மோசமான உணவுகள், ஒரு சில உடல்நல பிரச்சனைகள் மற்றும் கீமோதெரபி அல்லது ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகள் தலைமுடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

அடிக்கடி நீங்கள் கர்லிங் அயர்ன், ஹேர் டிரையர்கள் அல்லது ஸ்ட்ரெய்ட்னர்களை பயன்படுத்தும் ஒருவர் என்றால் உங்களுடைய தலைமுடி சேதமடைவதை குறைப்பதற்கு நீங்கள் ஹீட் ப்ரொடெக்டர் ஸ்பிரேக்களை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்பிரேக்களை பயன்படுத்துவதை நீங்கள் தவிர்த்தால் அது உங்களுடைய தலைமுடிக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தி, தலைமுடி உதிர்வை அதிகமாகும். இயற்கையான முறையில் அதிகப்படியான தலைமுடி உதிர்வை எப்படி சமாளிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் போன்ற ஹேர்கேர் ப்ராடக்டுகள் தலைமுடி உதிர்வை தடுப்பதில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. உங்களுடைய தலைமுடியின் வகை மற்றும் அமைப்பை பொறுத்து சரியான ப்ராடக்டுகளை தேர்வு செய்வது அவசியம். எப்பொழுதும் ஆல்கஹால் மற்றும் பாராபென்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இல்லாத ப்ராடக்டுகளை வாங்குங்கள். 

இதையும் படிக்கலாமே: இந்த ஹேபிட் இருக்கவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸ் இல்ல!!!

அடிக்கடி அல்லது வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்தி தலைமுடியை மற்றும் மயிர்க்கால்களை மசாஜ் செய்வது அளவுக்கு அதிகமான தலைமுடி உதிர்வை குறைக்கும். தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ஆர்கான் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவை இந்த மசாஜ் செய்வதற்கு சிறந்த எண்ணெய்களாக கருதப்படுகின்றன. உங்களுடைய மயிர்க்கால்களை 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்தாலே போதுமானது. இது தலைமுடிக்கு தேவையான போஷாக்கை வழங்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக தலைமுடி வளர்ச்சியை  ஊக்குவிக்கும்.

போதுமான அளவு தண்ணீர் பருகுவது ஆரோக்கியமான மயிர் கால்களை பராமரிப்பதற்கு மிகவும் அவசியம். நாள் முழுவதும் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உங்கள் மயிர்கால்களுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். அதேபோல ஒவ்வொரு நாள் இரவும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். உங்களுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை முயற்சி செய்யுங்கள்.

இறுதியாக எப்பொழுதும் உங்களுடைய தலைமுடிக்கு இயற்கையான தீர்வுகளை முடிந்த அளவு பின்பற்றுவது நல்லது. அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கொண்டிருப்பது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

23 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.