தருமபுரி : நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தண்ணீர் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகாவதி நீர்த்தேக்கதிலிருந்து தற்போது உள்ள தண்ணீர் வரத்தைக்கொண்டும், பென்னாகரம் வட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாயில் ஒவ்வொரு கால்வாயிலும் இரண்டு மண்டலங்களாக பிரித்து முதல் மண்டலத்திற்கு 5 நாட்கள் இரண்டாவது மண்டலத்திற்கு வினாடிக்கு 39.80 கன அடி வீதம் இன்று முதல் 2 ம் போக புன் செய் பயிர் சாகுபடி பாசனத்திற்கு 100 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தண்ணீர் திறந்து வைத்தார்.
இதன் மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,993 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் விமலநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.