புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின்துறை தலைமை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மையமாக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மின்துறை ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். இதனால் மின் சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் போராட்டம் காரணமாக சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் மின் துறை தலைமை அலுவலகம் அருகே 500 க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.