திருப்பூர் – பல்லடம் பேருந்து நிலையத்தில் மது போதையில் திருநங்கையை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹாரூன் பாஷா. இவர் கோவை உக்கடத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு ஹாரூன் பாஷா தனது நண்பன் காளிதாஸ் என்பவருடன் மது போதையில் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த ஹம்சா என்ற திருநங்கையும் மது போதையில் ஹாரூன் பாஷா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க: விவிபேட்-க்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி… வேட்பாளர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்த சுப்ரீம் கோர்ட்..!!!
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஹாரூன் பாஷா, தான் வைத்திருந்த கத்தியால் திருநங்கை அம்சாவின் தலையில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அம்சாவை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பி ஓடிய ஹாரூன் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலை மறைவாக உள்ள காளிதாஸ் என்பவரை தேடி வருகின்றனர். மேலும், ஹாரூன் பாஷா மீது ஏற்கனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.