புதுச்சேரியில் இன்று 345 நபர்களுக்கு கொரோனா
24 August 2020, 1:27 pmபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று 345 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 10859 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மேலோங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பாதிப்புகள் கட்டுக்குள் வந்த பாடில்லை. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று 345 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 10859 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 304 நபர்களுக்கும், காரைக்காலில் 31 நபர்களுக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3753 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 6942 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 5 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
0
0