தருமபுரி : பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொது காளை திடீர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டிஇ செங்கனூர். உள்ளிட்ட 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில் ஊர் பொதுவாக சுவாமி கூலிகாளை கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தது. இந்த காளை வருடந்தோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் இந்த காளை எருது விடும் விழாவில் தனது வீரத்தைக் காட்டி வந்துள்ளது.
இதற்கு பொதுமக்கள் சார்பாக புல்இ தவிடு போன்ற உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இந்த காளை உடல் குறைவால் திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். காளை மாட்டுக்கு சடங்குகள் மற்றும் மேள தாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர். இதுகுறித்து அங்குள்ள இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.