புதுச்சேரி : முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து புதுச்சேரி தலைமை நீதிமன்ற சிறப்பு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது. இவரது வீட்டின் முன்பு கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தியதில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த் திருசெல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வழக்கு , புதுச்சேரி நீதிமன்றத்தில் (தலைமை நீதிமன்றம்) நடந்து வந்தது, வழக்கில் 80க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் . இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருசெல்வம், தமிழசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய ஆறு பேரும் குற்றவாளிகள் என புதுச்சேரி நீதிமன்ற சிறப்பு நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் இதில் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 5 குற்றவாளிக்கு ரூ.3,500 அபராதமும், 1 குற்றவாளிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வருவதால், நீதிபதி அறிவித்த தண்டனை ஏழு ஆண்டுகள் ஏககாலத்தில் அனுபவித்து உள்ளார்கள், எனவே இவர்கள் ஆறு பேரும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.