ஆக.,2ம் தேதி முதல் அனைத்து வகுப்பிற்கும் பள்ளிகள் திறப்பு : அதிரடி காட்டும் பஞ்சாப் அரசு…!!
Author: Babu Lakshmanan31 July 2021, 5:40 pm
கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வரும் ஆக., 2ம் தேதி முதல் அனைத்து வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கம் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர், ஊரடங்கு மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கையினால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும், 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பாதிப்புகளை பொறுத்து மாநில வாரியாக கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகினறன.
இந்த நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பஞ்சாப் மாநில அரசு ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில், பஞ்சாபில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 2ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 10-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0