கோவை: பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ரோஜா,மல்லி,தாமரை என 18 வகை மலர்களால் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் தலைவர் ராஜா வாத்தியார் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும்,கோவை வடவள்ளி,நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தொடர்ந்து 20 ஆம் ஆண்டாக புஷ்பாஞ்சலி நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்,சுதர்சன மற்றும் நவக்ரஹ ஹோமங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை ஆயக்குடி ஸ்ரீ குமார் பாகவதர் தலைமையில் அவரது குழுவினர் ஐயப்பன் பாடல்களை பஜனையுடன் பாடி அசத்தினர்.இதனை கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து ராஷ்டிரிய சனாதன சேவை சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் முன்னிலையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இதில் பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தத்ரூபமாக வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு தாமரை,ரோஜா,மல்லி,சாமந்தி,என 18 வகை மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.இதில் பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
This website uses cookies.