புதுச்சேரி : புதுச்சேரியில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் வேலை வாய்ப்பு முகாமினை புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வேலைவாய்ப்பு முகாம் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாம் கையேட்டினை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நிபுனா & சேவா இன்டர்நேஷனல் சார்பில் 4 இளைஞர்கள் சேர்ந்து ஹைதராபாத்தில் மிகச்சிறப்பான ஒரு வேலைவாய்ப்பு முகாமிமை நடத்தினார்கள் என்றும்,
இந்த வேலைவாய்ப்பு முகமினை அவர்கள் கடந்த மாதமே புதுச்சேரியில் நடத்த தயாராக இருந்த போதில் கொரோனா உச்சத்தில் இருந்ததால் முகாம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால் வருகின்ற மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் 100 நிறுவனங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும், இந்த வாய்பினை புதுச்சேரி மாணவர்கள், இளைஞர்கள் நிச்சயமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுகொண்டார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.