Categories: Uncategorized @ta

காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது: ஈஷா அறக்கட்டளையின் விவசாயி பேட்டி!!

கோவை: காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடவு செய்ய முன்வந்துள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரலின் விவசாயி தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் அமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் அமைப்பின் விவசாயிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி தமிழ்மாறன், கடந்த 10 ஆண்டுகளாக ஈஷா உடன் பயணித்து வருவதாக தெரிவித்தார். சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பசுமை கரங்கள் திட்டத்தை 2004ல் துவங்கி தமிழகம் முழுவதும் மரங்களை நடும் திட்டத்தை துவக்கி வைத்து உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் நீர் மேம்பாட்டிற்காக ரேலி ஃபார் ரிவர் என்ற திட்டத்தை துவக்கி ஆறுகளை இணைக்கும் செயல்பாட்டினை செயல்படுத்தி வருவதாக கூறினார். மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 6 மாநிலங்கள் மரம் சார்ந்த விவசாயத்தை செய்து வருவதாக தெரிவித்தார். தற்போது தமிழகத்தின் முக்கிய ஆறாக விளங்கும் காவேரி ஆற்றை மீட்டெடுக்கும் விதமாக காவேரி கூக்குரல் என்ற திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது துவங்கிய சிறிது காலத்திலேயே ஊரடங்கு போடப்பட்டது. இருப்பினும் இதில் உள்ள உறுப்பினர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து மரங்களை வளர்த்து வந்தனர். தற்போது காவேரி கூக்குரல் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 2 கோடிக்கும் மேலான மரங்களை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதன் மூலம் பல விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். மேலும் காவேரி கூக்குரல் மூலம் விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயம் குறுத்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் வெற்றியாக தமிழக அரசும் 263 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண்ணின் தரம் அதில் விளைய கூடிய பொருட்களின் தரம் உயர்வதாகவும் தெரிவித்தார். இனி வரும் காலங்களிலும் இதனை விரிவு படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.