Categories: Uncategorized @ta

காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது: ஈஷா அறக்கட்டளையின் விவசாயி பேட்டி!!

கோவை: காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடவு செய்ய முன்வந்துள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரலின் விவசாயி தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் அமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் அமைப்பின் விவசாயிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி தமிழ்மாறன், கடந்த 10 ஆண்டுகளாக ஈஷா உடன் பயணித்து வருவதாக தெரிவித்தார். சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பசுமை கரங்கள் திட்டத்தை 2004ல் துவங்கி தமிழகம் முழுவதும் மரங்களை நடும் திட்டத்தை துவக்கி வைத்து உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் நீர் மேம்பாட்டிற்காக ரேலி ஃபார் ரிவர் என்ற திட்டத்தை துவக்கி ஆறுகளை இணைக்கும் செயல்பாட்டினை செயல்படுத்தி வருவதாக கூறினார். மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 6 மாநிலங்கள் மரம் சார்ந்த விவசாயத்தை செய்து வருவதாக தெரிவித்தார். தற்போது தமிழகத்தின் முக்கிய ஆறாக விளங்கும் காவேரி ஆற்றை மீட்டெடுக்கும் விதமாக காவேரி கூக்குரல் என்ற திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது துவங்கிய சிறிது காலத்திலேயே ஊரடங்கு போடப்பட்டது. இருப்பினும் இதில் உள்ள உறுப்பினர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து மரங்களை வளர்த்து வந்தனர். தற்போது காவேரி கூக்குரல் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 2 கோடிக்கும் மேலான மரங்களை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதன் மூலம் பல விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். மேலும் காவேரி கூக்குரல் மூலம் விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயம் குறுத்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் வெற்றியாக தமிழக அரசும் 263 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண்ணின் தரம் அதில் விளைய கூடிய பொருட்களின் தரம் உயர்வதாகவும் தெரிவித்தார். இனி வரும் காலங்களிலும் இதனை விரிவு படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.