அண்ணாமலையார் கோவிலில் இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை ஆறு மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பௌர்ணமி நேற்று மாலை 3:58 மணிக்கு தொடங்கி இன்று பிற்பகல் 3:07 மணி வரை உள்ளதால் காவல்துறை சார்பில் மகா தீபத்தன்று நேற்று போடப்பட்டிருந்த அதே 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 14 ஆயிரம் போலீசார் இன்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களை கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு ராஜகோபுரம் வழியாக காவல் துறையினர் உள்ளே தரிசனத்திற்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தி எந்த சிரமம் இன்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
This website uses cookies.