Categories: Uncategorized @ta

காதலர் தினத்தில் கல்யாணம் : ஏழு வகை தோலிசை கருவிகள் முழங்க கெட்டிமேளம்

கோவை: கோவையில் கெட்டிமேள வாத்தியத்திற்கு பதிலாக ஏழு வகை தோலிசை கருவிகள் கொண்டு காதலர் தினத்தில் திருமண வைபோவத்தை நடத்தியுள்ளனர் தம்பதியினர்.

திருமணம் என்றாலே “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தை நமக்கு நியாபகத்துக்கு வரும். கெட்டிமேளம் முளங்க கல்யாணம் நடப்பது என்ற வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளனர் கோவையை சேர்ந்த தம்பதியினர்.கோவையைச் சேர்ந்த ஆயுதம் அறக்கட்டளையின் நிறுவனர் விவேக் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரின் திருமணம் நிச்சயக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

காதலர் தினத்தன்று நடைபெறும் இந்த கல்யாணத்தை சிறப்பாகவும், வித்தியாசமான முறையிலும் நடத்த வேண்டும் என்று நினைத்த தம்பதியினர் கெட்டிமேள வாத்தியதிற்கு பதிலாக பறை, தவில், பம்பை, உடுக்கை, உருமி, முரசு, தமரு உட்பட 7 வகையான தோலிசைக் கருவிகள் கொண்டு மாங்கல்ய வாத்தியமாக கொண்டு திருமணத்தை நடத்தியுள்ளனர்.

தவில் நாதஸ்வரம் மட்டுமே கொண்டு நடந்த மாங்கல்ய வாத்தியத்தில் கலை ரீதியாக ஓர் சமூக மாற்றம் கொண்டுவரவும், பறை உள்ளிட்ட இசைக் கருவிகளை மங்கல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என ஓர் புது முயற்சியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. வழக்கமாக கெட்டி மேளம் முழங்க திருமணத்தை பார்த்த மக்கள் வித்யாசமான இசையில் திருமணத்தைப் பார்த்து வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.