கோவை: கோவையில் கெட்டிமேள வாத்தியத்திற்கு பதிலாக ஏழு வகை தோலிசை கருவிகள் கொண்டு காதலர் தினத்தில் திருமண வைபோவத்தை நடத்தியுள்ளனர் தம்பதியினர்.
திருமணம் என்றாலே “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தை நமக்கு நியாபகத்துக்கு வரும். கெட்டிமேளம் முளங்க கல்யாணம் நடப்பது என்ற வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளனர் கோவையை சேர்ந்த தம்பதியினர்.கோவையைச் சேர்ந்த ஆயுதம் அறக்கட்டளையின் நிறுவனர் விவேக் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரின் திருமணம் நிச்சயக்கப்பட்டு இன்று நடைபெற்றது.
காதலர் தினத்தன்று நடைபெறும் இந்த கல்யாணத்தை சிறப்பாகவும், வித்தியாசமான முறையிலும் நடத்த வேண்டும் என்று நினைத்த தம்பதியினர் கெட்டிமேள வாத்தியதிற்கு பதிலாக பறை, தவில், பம்பை, உடுக்கை, உருமி, முரசு, தமரு உட்பட 7 வகையான தோலிசைக் கருவிகள் கொண்டு மாங்கல்ய வாத்தியமாக கொண்டு திருமணத்தை நடத்தியுள்ளனர்.
தவில் நாதஸ்வரம் மட்டுமே கொண்டு நடந்த மாங்கல்ய வாத்தியத்தில் கலை ரீதியாக ஓர் சமூக மாற்றம் கொண்டுவரவும், பறை உள்ளிட்ட இசைக் கருவிகளை மங்கல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என ஓர் புது முயற்சியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. வழக்கமாக கெட்டி மேளம் முழங்க திருமணத்தை பார்த்த மக்கள் வித்யாசமான இசையில் திருமணத்தைப் பார்த்து வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.