திருவள்ளூர்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி பகுதியில் கை கால்களை இழந்த சின்னப்பரெட்டி என்ற முதியவரை நலம் விசாரித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
சீத்தஞ்சேரி காட்டு சாலையில் கலையரசன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி சென்ற மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி மோதியதில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரது மனைவி ஜோதி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆட்டோவில் வந்த சாரதாம்பாள், பொம்மி, வைஜெயந்திமாலா,உஷாராணி, சரஸ்வதி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஜோதியின் உடலை மீட்டு பென்னாலூர் பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கை கால் இழந்த முதியவரை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது நடைபெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.