திண்டுக்கல்: மருத்துவக்கல்லூரி சாலை ஒன்றில் எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் தீ வைத்து எரித்து கொன்றார்களா. என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாலை சந்திப்பில் உள்ளது ஜோசப் காலனி. இந்த சாலையில் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் முற்றிலும் எரிந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் அப்பெண் குறித்து விசாரணை நடத்தினர் . உடலின் முகம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி எரிந்த நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இறந்த பெண்ணின் அருகே பெட்ரோல் கேன் ஒன்று கிடந்தது.
அதனை கைப்பற்றிய போலீசார், உடலை உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
அந்தப் பெண் பெட்ரோல் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா?. யாரேனும் எரித்துக் கொலை செய்துள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.