தருமபுரி : அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்ட அதிமுக முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அவரது உறவினர்கள், மற்றும் அவருக்கு ஆதரவாளர்கள் என தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை மற்றும் தெழுங்கான உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையில் சோதனை செய்தனர். அப்போது தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து இன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு அதிமுக முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
அதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் புகழ் பெற்ற காசிக்கு அடுத்தபடியாக உள்ள காலபைரவருக்கு என தனி கோவில் அமைந்துள்ள அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் கோவிலில் அதிமுக முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் இன்று காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதியமான் கோட்டை பகுதிக்கு வந்து இருந்தார். காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் தன் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.