Categories: Uncategorized @ta

யோகி பாபு சொன்னது எல்லாம் பொய்- பொதுவெளியில் திடீரென போட்டுடைத்த பிரபலம்!

முன்னணி காமெடி நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் தனது கெரியரை தொடங்கியவர் யோகி பாபு. அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் வந்தார். 

தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த யோகி பாபு, ஒரு கட்டத்திற்குப் பிறகு காமெடி ரோலில் கலக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த்,  விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக ஜொலித்த யோகி பாபு பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். 

அவர் சொன்னதெல்லாம் பொய்

அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய யோகி பாபு, “எனக்கு கதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. எழுத்தாளர் சங்கத்தில் 10 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன்” என கூறினாராம். இந்த நிலையில் சமீபத்தில் தனது வலைப்பேச்சு வீடியோவில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி இது குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.

அதாவது இன்று காலை எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் பிஸ்மிக்கு ஃபோன் செய்தாராம். அவர் “யோகி பாபு இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார், 2021 ஆம் ஆண்டின் முடிவில்தான் யோகி பாபு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்தார்” என பிஸ்மியிடம் கூறினாராம். 

தான் ஒரு கதை எழுதப்போவதாகவும் அதற்காகத்தான் எழுத்தாளர் சங்கத்தில் சேர முடிவெடுத்ததாகவும் யோகி பாபு கூறினாராம். ஆனால் எழுத்தாளர் சங்கத்தின் விதிமுறைகளின்படி யோகி பாபு அச்சங்கத்தில் சேர முடியாதாம். எனினும் அவர் ஒரு சினிமா பிரபலம் என்பதனாலும் அவர் அச்சங்கத்துக்கு ரூ.50,000 நன்கொடை கொடுத்ததாலும் அவரை சேர்த்துக்கொண்டார்களாம். இவ்வாறு யோகி பாபு அச்சங்கத்தில் சேர்ந்தே 4 ஆண்டுகள்தான் ஆகிறது என அந்நபர் கூறியதாக பிஸ்மி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். 

Arun Prasad

Recent Posts

யாருக்குமே கை கொடுக்க மாட்டேன்- சர்ச்சை வீடியோவுக்கு கறாராக பதில் சொல்லும் நித்யா மேனன்!

சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின்…

6 hours ago

இபிஎஸ், அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா… அதிர்ச்சி வீடியோவால் அரசியலில் பரபரப்பு!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…

8 hours ago

என் படத்தை பார்த்துட்டு அந்த இயக்குனர் ஓங்கி அடிச்சாரு- சேரன் சொன்ன தரமான சம்பவம்!

தவமாய் தவமிருந்து  சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…

8 hours ago

திருச்செந்தூர் கடலில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? பக்தர்கள் பரபரப்பு புகார்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…

9 hours ago

விஷால் வீட்டுல அனுமதி எதுக்கு கேட்கணும்.. நான் இப்படித்தான் : சாய் தன்ஷிகா ஓபன் டாக்!

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…

10 hours ago

பாமகவில் நடப்பது தந்தை மகன் பிரச்சனை.. கூட்டணி கட்சி என்பதால்.. வானதி சீனிவாசன் நெத்தியடி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…

10 hours ago

This website uses cookies.