சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஏ.சி. பெட்டியில் தவறுதலாக ஏறிய பயணி ஒருவர் அதிலிருந்து இறங்கி பொது பெட்டியில் ஏறுவதற்காக அவசரமாக இறங்க முயன்றார்.
ரயில் கிளம்பிக்கொண்டிருக்கும்போது அவர் இறங்கியதால், எதிர்பாராதவிதமாக தவறி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மாதுரி இதை பார்த்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று அந்த பயணியை தரதரவென இழுத்து வந்து காப்பாற்றினார்.
ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆண் பயணியை பெண் போலீஸ் மாதுரி தனி ஒருவராக தரதரவென இழுத்து உயிரை காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, துரிதமாக விரைந்த பயணியின் உயிரை காப்பாற்றிய காவலர் மாதுரிக்கு அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.