கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் ஓவனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹாலிபாக்ஸ்: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் பிரபல வால்மார்ட் ஸ்டோர் இயங்கி வருகிறது. இங்கு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில், ஒரு இளம்பெண் அங்கு இருக்கும் நடமாடும் ஓவனில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த கனடா போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, அங்கு பணிபுரிந்து வருவோரிடம் விசாரித்தனர்.
அப்போது, அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது, அவரது பெயர் குர்சிம்ரன் கவுர் என்றும் தெரிய வந்தது. மேலும், அதே கடையில் அவரது தாயாரும் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ நாளன்று, குர்சிம்ரனை வெகு நேரமாக காணவில்லை எனக் கூறி அவரது தாயார் தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஓவனிலிருந்து ஏதோ ஒன்று லீக் ஆவதை அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது, அதில் குர்சிம்ரனின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும், குர்சிம்ரனின் தந்தை மற்றும் சகோதரர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லூதியானைவைச் சேர்ந்த குர்சிம்ரன் குடும்பத்தினர், 2021ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்றுள்ளனர். தனது கனவு வீட்டை கட்டமைத்து, அதில் வாழ வேண்டும் என்ற கனவோடு தாய் – மகள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க : நான் வரேன்.. அடுத்த திட்டத்தில் அதிமுக.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!
சீக்கிய மதத்தைச் சேர்ந்த குர்சிம்ரன், மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பு மூலம் நிதியுதவி பெற்று படிப்பையும் தொடர்ந்து வந்து உள்ளார். இந்த நிலையில், அவ்வமைப்பு சார்பில் குர்சிம்ரன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பு வெளியிட்ட பதிவில், “இது மிகவும் கவலை அளிக்கும் மற்றும் சோகமான செய்தி. நாங்கள் அனைத்து தார்மீக மற்றும் நிதி ஆதரவை வழங்க முயற்சிக்கிறோம். நிதி உதவிக்கு கூடுதலாக, குர்சிம்ரனின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆதரவையும் வழங்குகிறது. இந்த துயரமான தருணம், அவர்களின் வாழ்க்கையில் எடுத்த உணர்ச்சிகரமான எண்ணிக்கையை அங்கீகரிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.