பூச்சிகளை சாப்பிட அனுமதி கேட்கும் பிரபல நாடு: அதிர்ச்சி அளிக்கும் ‘வருங்கால உணவு’.. இந்த காரணத்திற்காகவா..!

சிங்கப்பூர் நாட்டில் பூச்சிகளை உட்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து அந்த நாட்டின் உணவுத் துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூச்சிகளை மனிதா்கள் உணவாகக் கொள்ளவும், கால்நடைத் தீவனமாக அளிக்கவும் அனுமதிப்பது தொடா்பாக உணவு மற்றும் கால்நடைத் தீவன தொழில் துறையிடம் அரசு கருத்து கோரி உள்ளது.

இதற்கு அனுமதி கிடைத்தால் பாச்சைகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களை மனிதா்கள் உட்கொள்ள முடியும். இந்தப் பூச்சிகளை நேரடியாகவோ, எண்ணெயில் பொறித்தோ சாப்பிட முடியும் என ‘ஸ்டிரைட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடா்பான நடைமுறைகளை, பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து சிங்கப்பூா் உணவுத் துறை பெற்றுள்ளது.

‘முழுமையான அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என மதிப்பிட்டு உள்ளோம்’ என உணவுத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்து உள்ளாா்.

அண்மைக்காலமாக மனிதா்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைத் தீவனத்துக்காகவும் வணிக ரீதியான பூச்சிப் பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.