ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தளம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தலிபான்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் அந்நாட்டில் குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
இந்நிலையில், தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.