காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பக்டிகா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நில அதிர்வால், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
அவர்களில் முதற்கட்டமாக 255 பேர் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி உள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல வெளியேறிவிட்டனர். இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அனைத்து தொண்டு நிறுவனங்களும் உதவி செய்யும்படி தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்திலும் உணரப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.