கீவ்: உக்ரைனில் பள்ளி கூடத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினரால் நடந்த வெடிகுண்டுகள் தாக்குதலில் 60 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள போரால் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலரும் போரில் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் பல நகரங்களில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் குண்டுவீச்சுகளால் சேதமடைந்து உள்ளன.
போரானது நீண்ட காலத்திற்கு தொடரும் என கூறப்படுகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே உக்ரைனியர்கள் அகதிகளாக வாழ கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த போரில் கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ் பகுதியில் பிலோகோரிவ்கா கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதில் அந்த பள்ளிக்கூடம் முற்றிலும் சேதமடைந்தது என லுகான்ஸ்க் கவர்னர் செர்கீ கைடாய் கூறியுள்ளார். வெடிகுண்டுகள் வீசப்பட்டபோது, அந்த பள்ளி கூடத்தில் மொத்தம் 90 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 27 பேர் காப்பாற்றப்பட்டு விட்டனர். பள்ளியில் இருந்த 60 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.