இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது.
மேற்கொண்டு 90,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் இன்னும் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த போது அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்கி இருக்கின்றனர்.
இதன் விளைவாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், தஹ்ரானில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த தகவலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.