தாய்லாந்தில் ஷேன் வார்ன் தங்கியிருந்த அறையில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தாய்லாந்தில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 52 வயதான ஷேன் வார்ன், அவரது 3 நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக தாய்லாந்து சென்றிருந்தார். தாய்லாந்தின் கோஹ் சாமுய் என்ற பகுதியில் அவருக்கு சொந்தமான வில்லா ஒன்று உள்ளது.
அதில் தான் ஷேன் வார்ன் தங்கியிருந்தார். விடுமுறையை கழிக்க சென்ற ஷேன் வார்ன் திடீரென உயிரிழந்ததால் அனைவரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். கடந்த 4ம் தேதி இரவு உயிரிழந்த ஷேன் வார்னின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்திய தாய்லாந்து போலீஸார், ஷேன் வார்னின் இறப்பு குறித்த விவரங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, ஷேன் வார்னின் அறையில் பல இடங்களில் ரத்தக்கறை இருந்திருக்கிறது. அவரது அறையின் தரை, அவரது துண்டு மற்றும் தலையணை ஆகியவற்றிலும் ரத்தக்கறை படிந்திருக்கிறது.
அறையில் உணர்வில்லாமல் இருந்த ஷேன் வார்னுக்கு அவரது நண்பர்கள் சிபிஆர் முதலுதவி அளித்துள்ளனர். 20 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அதன்பின்னர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. எனவே அவர் தங்கியிருந்த இடத்தில் எந்த பிரச்னையும் இல்லை. வார்னுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்களும் இல்லை என்று தாய்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.