காலியாக உள்ள இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி என தகவல் வெளியாகியுள்ளது.
தன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே தனக்கு எதிராக இருந்த காரணத்தால், தனது ஆதரவை பிரிட்டனில் இழந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவி மற்றும் தனது கட்சி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து அந்த பதவிகளுக்கு தற்போது காலி இடம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் போரிஸ் ஜான்சனை எதிர்த்து தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்-வும் உள்ளார்.
அதே போல, லிஸ் ட்ரஸ், பென் வாலஸ், ஜெர்மி ஹன்ட் எனும் முன்னாள் அமைச்சர்களும் இந்த இங்கிலாந்து பிரதமர் போட்டியில் இருப்பதால் போட்டி மிக மிக கடுமையாக இருக்கும் என்கிறது இங்கிலாந்து செய்தி வட்டாரம்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.. இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளரின நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை பிரிட்டன் பிரதமராக ரிஷி தேர்வானால் வரலாற்றில் முதன்முறையாக் பிரிட்டனை ஆளும் இந்திய வம்சாவளி என்ற பெருமையை அடைவார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.