காபூல்: ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்க்கும் கடும் பனியில் சிக்கி 42 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் 15 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் பனியில் சிக்கி 42 பேர் பலியானதுடன், 76 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த 20 நாட்களில் ஆப்கன் முழுதும் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கன் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
வேலையின்மையும் அதிகரித்துள்ளதால், மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்நிலையில் கடும் பனிப் பொழிவும் ஆப்கன் மக்களை வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவு மேலும் கடுமையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.