அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் போட்டி போட்டு அரிசிகளை வாங்கி குவிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாசுமதி அல்லாத அரிசிகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நேற்று தடை விதித்து உத்தரவிட்டது. இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அரிசியின் சில்லறை விற்பனை விலை ஓராண்டில் 11.5 சதவீதமும் கடந்த ஒரு மாதத்தில் 3% சதவீதமும் உயர்ந்துவிட்டதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பற்றாக்குறை ஏற்படும் அச்சத்தால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கிக் குவிக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, உக்ரைன் – ரஷ்யா போரின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை சர்வதேச அளவில் உயர்ந்து காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்போதைய முடிவு வெளிநாடுவாழ் இந்தியர்களை கதிகலங்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் அரிசிக்காக முட்டிமோதி கடைகளில் வாங்குகின்றனர். அரிசி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உருவாகுமோ என்ற அச்சத்தில் நீண்ட வரிசையில் நின்று கடைகளில் வாங்கிச் செல்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.