இலங்கையில் ராஜபக்சேக்கள் அரசு பதவி விலக வலியுறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் பொதுமக்கள் கூடாரங்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் சிங்களர், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என மூவின மக்களும் இணைந்து பங்கேற்றுள்ளனர். இப்போராட்டம் இடைவிடாமல் நடைபெறுவதால் ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று பதவி விலகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையில் மகிந்த ராஜபக்சேவும் இதனை சூசகமாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் முதலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் கொழும்பு காலிமுகத்திடல் நோக்கி சென்றனர். அங்கு போராட்டகாரர்களின் கூடாரங்களுக்கு தீ வைத்து தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் மீது நீர் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடிக்க முயற்சித்தனர்.
ஆனாலும் ராஜபக்சே ஆதரவு குண்டர்கள் வெறியாட்டம் தொடருகிறது. மேலும் கொழும்புவில் முகாமிட்டிருந்த இளைஞர் அதிபர் மாளிகையை முற்றுகையிட முன்றார். அப்போது ராஜபக்சே ஆதரவாளர்கள் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ராஜபக்சே அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
கொழும்பில் பதற்றம் நீடித்து வருவதால் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.