முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இன்று அந்நாட்டின் நரா என்னும் பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஷின்சோ அபே மீது பின்னால் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், மார்பில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, படுகாயமடைந்து மயக்க நிலையில் இருந்த ஷின்சோ அபேவை அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இதனிடையே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அவர் பொதுநிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரை பின்னால் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.