முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இன்று அந்நாட்டின் நரா என்னும் பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஷின்சோ அபே மீது பின்னால் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், மார்பில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, படுகாயமடைந்து மயக்க நிலையில் இருந்த ஷின்சோ அபேவை அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இதனிடையே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அவர் பொதுநிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரை பின்னால் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.