இன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்ய்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆண்கள் 100 மீட்டர் பேக்-ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில், அவர் 54.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாம் இடம்பிடித்தார். இதன்மூலம், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற பிரிவுகளில், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில், சாஜன் பிரகாஷ் 8-வது இடம்பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் 25.01 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
அதேபோல, 400 மீட்டர் ப்ரீ-ஸ்டைல் பிரிவில், குசக்ரா ராவத் 14-வது இடம்பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் 3 நிமிடம் 57.45 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.