காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தவறுதலாக பிணைக்கைதிகள் 3 பேரை சுட்டுக்கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவை தொடர்ந்து, தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸின் முக்கிய இடமான ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே நேரடி சண்டை நிலவி வருகிறது.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனிடையே, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் என தவறுதலாக நினைத்து 3 பிணைக்கைதிகளை சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய இஸ்ரேல் ராணுவம், சுட்டுக்கொலை செய்யப்பட்ட 3 பேரில் 2 பேரின் விபரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஒருவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 240க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாக்குதலை தீவிரப்படுத்தி அவர்கள் மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
This website uses cookies.