உலகம்

இந்துக் கோயில் மீது அதிபயங்கர தாக்குதல்.. மோடி தடாலடி பதில்!

கனடாவில் இந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கோழைத்தனமான முயற்சி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

டெல்லி: சமீப காலமாக, இந்தியா – கனடா நல்லுறவு இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இது ஆறிவரும் எனக் கருதிய நிலையில், தூதகர்கள் வெளியேற்றம், இந்துக் கோயில் மீது சேதம் என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி, இரண்டு நாடுகளும் தற்போது எதிரெதிர் திசையில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மீண்டும் இந்துக் கோயில் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சர்வதேச அளவில் அரசியல் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதன்படி, கனடாவின் டொராண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் என்ற பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலின் போது, கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு காரணமாக, கனடாவில் உள்ள தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகள் வந்ததற்கு கண்டனம் தெரிவித்து, இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “பிராம்ப்டனில் உள்ள இந்துக் கோயிலில் அரங்கேறிய வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனடா மக்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கடைபிடிக்க உரிமை உண்டு. மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “கனடாவில் இந்துக் கோயில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோல், நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: உள்துறை அமைச்சர் பதவியும் எனக்குத்தான்.. முதலமைச்சரை எச்சரிக்கும் துணை முதலமைச்சர்!

மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது குற்றம் சுமத்திய கனடா அரசு, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட 6 இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை இந்திய அரசு வெளியேற்றி உள்ளது. இவ்வாறு இந்தியா – கனடா உறவு தொடர்ந்து எதிரெதிராகவே அமைந்து வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.