சென்னை ; சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி இந்தோனேசியாவில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் விபூஷ்னியா. இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் கடந்த ஜுன் 1ம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, இருவரும் இந்தோனேசியாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக படகில் இருந்து இருவரும் தண்ணீரில் விழுந்தனர். இதனை கண்டவர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். அதேவேளையில், விபூஷ்னியாவின் உடல் நீண்ட தேடுதலுக்கு பிறகு சிக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரின் உடல்களை இந்தியாவிற்கு எடுத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் ஹனி மூனுக்காக இந்தோனேசியா சென்ற மருத்துவ தம்பதி தண்ணிரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.