சென்னை ; சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி இந்தோனேசியாவில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் விபூஷ்னியா. இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் கடந்த ஜுன் 1ம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, இருவரும் இந்தோனேசியாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக படகில் இருந்து இருவரும் தண்ணீரில் விழுந்தனர். இதனை கண்டவர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். அதேவேளையில், விபூஷ்னியாவின் உடல் நீண்ட தேடுதலுக்கு பிறகு சிக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரின் உடல்களை இந்தியாவிற்கு எடுத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் ஹனி மூனுக்காக இந்தோனேசியா சென்ற மருத்துவ தம்பதி தண்ணிரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.